இலங்கை

இலங்கை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களைப் பயன்படுத்த தடை!

தேர்தல் நடவடிக்கைகளில் சிறுவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தேர்தல்கள் கண்கணிப்பு அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த ஹேரத்தினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இறையாண்மை மற்றும் மக்களின் வாக்குகளை வெறும் பண்டமாக மாற்றாமல் எதிர்கால சந்ததியினருக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு வேட்பாளர்களுக்கு உண்டு என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நினைவூட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியது: “வாக்காளர்களும் தங்கள் வாக்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டியது என்சிபிஏவின் பொறுப்பாகும். இது தேர்தல் ஆணையத்தால் பிரத்தியேகமாக நினைவூட்ட வேண்டிய ஒன்றல்ல” என்றார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்