ஆர்மீனியா இனி ரஷ்யாவை நம்பியிருக்க முடியாது: பிரதமர் நிகோல் பஷினியன்
ஆர்மீனியா தனது முக்கிய பாதுகாப்பு மற்றும் இராணுவ பங்காளியாக ரஷ்யாவை இனி நம்ப முடியாது என பிரதமர் நிகோல் பஷினியன் கூறியுள்ளார்.
ஏனெனில் மாஸ்கோ பலமுறை அதை கைவிட்டதால் அமெரிக்கா மற்றும் பிரான்சுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவது பற்றி யெரெவன் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜோர்ஜியா, அஜர்பைஜான், ஈரான் மற்றும் துருக்கி எல்லையில் உள்ள முன்னாள் சோவியத் குடியரசு ஆர்மீனியா, நீண்ட காலமாக ரஷ்யாவை ஒரு பெரிய வல்லரசுக் கூட்டாளியாக நம்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)