பொழுதுபோக்கு

அரண்மனை 4 எத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கு தெரியுமா??

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸான அரண்மனை 4 பாசிட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி, வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டுவருகிறது.

இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷிகண்ணா, கோவை சரளா, யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். எதிர்பார்த்தபடியே இந்தப் படமும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதிலும் தமன்னாவின் நடிப்பு, கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துவருகின்றனர். மேலும் 2024ஆம் ஆண்டுக்கான முதல் கோலிவுட் ஹிட் படமாக இது அமைந்திருக்கிறது.

இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி படம் வெளியான முதல் நாளில் 4.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 6.25 கோடி ரூபாயும் வசூல் செய்து முதல் இரண்டு நாட்களிலேயே 10 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இப்போது மூன்றாவது நாளான நேற்றைய வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரையரங்குகளில் கூட்டம் நல்லபடியாகவே இருந்தது. எனவே நேற்று மட்டும் இந்தப் படம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே படம் வெளியாகி மூன்று நாட்களில் மொத்தம் அந்தப் படம் 17 கோடி ரூபாய்வரை வசூலை அள்ளியிருக்கிறது.

படத்துக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால் இனிவரும் நாட்களிலும் கூட்டம் அதிகரித்து வசூலில் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகமொத்தம் அரண்மனை 4 படத்தை சுந்தர்.சி பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்திருக்கிறார் என்று திரைத்துறையினர் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content