வட அமெரிக்கா

இலங்கை வரும் போது விபத்துக்குள்ளான கப்பல் – பாலம் இடிந்த சம்பவம் தொடர்பில் விசாரணை

இலங்கை வரும் போது கப்பல் மோதி விபத்துக்குள்ளான அமெரிக்காவில் பால்ட்டிமோர் (Baltimore) பாலம் இடிந்துவிழுந்த சம்பவத்தை அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கான குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கக் கட்டமாகப் பாலத்தை மோதிய டாலி சரக்குக் கப்பலுக்குள் அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்துகின்றனர்.

எனினும் அதன் தொடர்பில் இப்போதைக்கு ஏனைய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பாலம் இடிந்தபோது காணாமல் போனதாகக் கூறப்பட்டவர்களில் 4ஆவது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கட்டுமான வாகனத்திலிருந்து அந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால் அந்த நபரின் அடையாளங்கள் அறிவிக்கப்படவில்லை.

அந்தப் பாலம் கடந்த மார்ச் 26ஆம் திகதி இடிந்துவிழுந்தது. அதில் 6 பேர் மாண்டனர். இரண்டு பேர் இன்னும் தேடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content