கல்லறையிலிருந்து மனித எச்சங்களை திருடிய அமெரிக்க நபர் கைது
American man arrested for stealing human remains from cemetery
அமெரிக்காவின்(America) தென்மேற்கு பிலடெல்பியா(Philadelphia) கல்லறையில் மனித எலும்புக்கூடுகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட பென்சில்வேனியா(Pennsylvania) நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எப்ராட்டாவைச்(Ephrata) சேர்ந்த 34 வயதான ஜோனாதன் கெர்லாக்(Jonathan Gerlock) மவுண்ட் மோரியா(Mount Moriah) கல்லறையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் முதல் கல்லறை திருடப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து காவல்துறையினர் கல்லறையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், விசாரணையின் போது ஜோனாதன் கெர்லாக் சுமார் 30 ஜோடி மனித எச்சங்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், அவரது வீட்டில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 100க்கும் மேற்பட்ட முழு மற்றும் பகுதி மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.





