உலகம் செய்தி

நட்பு நாடுகள் அமெரிக்காவிற்கு முழு ஆதரவு அளிக்கின்றன – நேட்டோ

அமெரிக்காவின் ஈரானுடனான போர் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் விரைவாக ஆதரவு வழங்குவதாக நேட்டோ தலைவர் ரூட்டே, தனது உரையில், வலியுறுத்தியுள்ளார்.

ஆரம்ப கட்டத் தாக்குதல்களில் நட்பு நாடுகள் சில சற்று மெதுவாக செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களை முன்னறிவிப்பு இன்றி அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், தற்போது ஐரோப்பா முழுவதும் நாடுகள் மிகப்பெரிய அளவிலான ஆதரவை வழங்குகின்றன என்று ரூட்டே தெரிவித்தார்.

ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில் நாடுகளின் கூட்டணியை வழிநடத்தியதற்காக பிரித்தானியாவையும்
அவர் பாராட்டினார்.

“சுமார் விதிவிலக்கின்றி, அமெரிக்கா கேட்கும் அனைத்தையும் நட்பு நாடுகள் செய்து வருகின்றன, இது ஒரு மனநிலை மாற்றத்திற்கான சான்றாகும்.” என்றும் நேட்டோ தலைவர் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி