இந்தியா செய்தி

சிகிச்சை அளித்த மருத்துவரையே கொடூரமாக கொலை செய்த கைதி

Doctor killed in kerala by his patient

இந்தியாவின் கேரள மாநிலம், கொட்டாரக்கரையில் பெண் மருத்துவர் ஒருவர் புதன்கிழமை (மே 10) அதிகாலை நோயாளியால் குத்திக் கொல்லப்பட்டார்.

கேரளா மாநிலத்தில் உள்ள கொட்டாரக்கரையிலேயே இந்த பதறவைக்கும் கொலை இன்று 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சிறைக்கைதி ஒருவன் அந்த மருத்துவரைக் கத்திரிக்கோலால் பெண் மருத்துவர் ஓருருவரை குத்திக் கொலை செய்துள்ளான்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய டாக்டர் வந்தனா தாஸ் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இறந்தவர், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வந்தனா தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு வயது 23.

மருத்துவரை கொலை செய்தவன் என்று குற்றம் சட்டப்பட்டவன் சந்தீப், 42, என்றும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்ததாவும் தெரியவருகிறது. தமது வீட்டிற்கு அருகே சிலருடன் தகராற்றில் ஈடுபட்டதில் அவன் காயமடைந்தான்.

புதன்கிழமை காலை 4.30 மணிக்கு கொட்டாரக்கரை மருத்துவமனைக்கு குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் கொண்டுசெல்லப்பட்டான்.

அவனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை எடுத்து மருத்துவரை சந்தீப் குத்தியதில் மருத்துவர் கொல்லப்பட்டார்.

(Visited 2 times, 1 visits today)

hqxd1

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content