இலங்கை செய்தி

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

கடந்த ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தின் முன்னணி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, இதே காலப்பகுதியில் அரசாங்க வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் 42% அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு நோயாளர்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளமையே இந்த நிலைமைக்கு காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை