ஐரோப்பா

சுவிஸில் உள்ள உக்ரைன் அகதிகள் சிலருக்கு உருவாகியுள்ள சிக்கல்

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் உக்ரைன் அகதிகள் சிலருக்கு, கார் வைத்திருப்பது புதிய பிரச்சினை ஒன்றை உருவாக்கியுள்ளது.

அதாவது, இந்த உக்ரைன் அகதிகள் அரசு உதவி கோரும் பட்சத்தில், அவர்கள் ஏதாவது சொத்து வைத்திருந்தால், அரசு உதவி கோருவதற்கு முன் அந்த சொத்துக்களை விற்பனை செய்துவிடவேண்டும் என விதி உள்ளது.

குறிப்பாக, Vaud மாகாண அதிகாரிகள், கார் வைத்திருக்கும் அகதிகளை குறிவைத்துள்ளார்கள். ஜெனீவாவில் இந்த நிலைமை இல்லை.ஆனால், தங்கள் காரை இழக்க உக்ரைன் அகதிகளுக்கு விருப்பம் இல்லை. பலர், தங்கள் காரை தங்களால் விற்க முடியாது என்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்கள் அந்தக் காரின் உண்மையான சொந்தக்காரர்கள் அல்ல!

அதாவது, அந்தக் காரின் உரிமையாளர் இன்னும் உக்ரைனில் இருக்கிறார். இவர்கள் அந்தக் காரை லீஸுக்கு எடுத்திருக்கிறார்கள். ஆக, அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பும்போது, அந்தக் காரை அவர்கள் தங்களுடன் கொண்டு செல்வது அவசியமாகிறது.

அத்துடன், தங்கள் காரின் உண்மையான மதிப்பை விட, சுவிஸ் அதிகாரிகள் அவற்றின் மதிப்பை அதிக மதிப்புடையதாக கருதுவதாக உக்ரைன் அகதிகள் கருதுகிறார்கள்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content