மர்மமான முறையில் கிடந்த என்புக்கூடு!
யாழ்ப்பாணம், வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணியில் இருந்து மனித என்புக் கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள பற்றைக் காணி ஒன்றில் என்புக் கூடுகள் இருப்பதாக காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது.
இந்த என்புக் கூடு, சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் என்புக்கூடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித ஆதாரங்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
மேலும், குறித்த என்புக்கூடு பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





