இலங்கை

இலங்கை: விரைவில் க.பொ.த உயர்தரப் பரீட்சை! கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மே மாதம் வெளியிடப்பட்ட 2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் பெறுபேறுகள் உயர்தர மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்கள் இரண்டு வருடங்களுக்குள் உயர்தரப் பரீட்சைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் ஒரு கட்டமாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் மற்றும் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னரே உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன் உயர்தர வகுப்புகள் இந்த வாரம் ஆரம்பமாகும் என்றும், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் தொடரும் என்றும் அவர் கூறினார்.

இம்முறையின் மூலம் பெறுபேறுகளை எதிர்பார்த்து கடந்த 3-4 மாத இடைவெளி கைவிடப்பட்டு, மாணவர்கள் உயர்கல்வியைத் தொடரவும், உயர்தரக் கல்வியை நிர்ணயிக்கப்பட்ட இரண்டு வருட காலப்பகுதிக்குள் முடிக்கவும் முடியும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

.மேலும் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content