இலங்கை

பாம்பு கடிக்கு இலக்கான இரண்டரை வயது சிறுமி! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கோமரங்கடவல -கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (13) காலை இடம் பெற்றுள்ளது.

வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த சிறுமி கதறியதை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது சிறுமிக்கு அருகில் பாம்பு நிற்பதை அவதானித்ததாகவும் இதனையடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாம்பு கடிக்கு உள்ளான சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த நெதின தேனாஸ் எனவும் தெரியவருகிறது.

கடும் வெயிலுடன் கூடிய மழை பெய்தமையினால் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இடம்பெற்று வருவதாகவும் சிறார்களை பற்றை காடுகளுக்கு அருகில் விளையாடுவதற்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் திருகோணமலை பொது வைத்தியசாலை சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content