நுவரெலியாவில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவர் கைது!
![](https://iftamil.com/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-20-at-15.30.34_4224bd2f.jpg)
நுவரெலியா டொபாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, 19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 35 வயதான இங்கிலாந்து பிரஜையான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேனின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)