இலங்கை செய்தி

கோர விபத்தில் சிக்கி இரு வௌிநாட்டவர் பலி

எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மாற்றுத்திறனாளிகள் தங்கள் எண்ணங்களைப் பயன்படுத்தி பொருட்களைப் பயன்படுத்துவதற்கான திறனை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை சோதனை செய்துள்ளது.

‘நியூரோலிங்க்’ நிறுவனம், மனித மூளையில் கணினி சிப்பை பொருத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதியும் பெற்றுள்ளது.

இதுபோன்ற மூளைச் சிப்பை மனிதனிடம் முதன்முதலில் பரிசோதித்தது இந்நிறுவனம்தான்.

சிப் பொருத்தியவர் தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியில் மனித முடியை விட நுண்ணிய 64 நெகிழ்வான இழைகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மனித மூளை கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலோன் மஸ்க் கூறுகையில், ‘நியூரோலினிக்’ நிறுவனம் இந்த சிப்புக்கு ‘டெலிபதி’ என்று பெயரிட்டுள்ளது. முடங்கியவர்கள் தங்கள் எண்ணங்களைப் பயன்படுத்தி மின்னணு சாதனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சிப் வடிவமைக்கப்பட்டது.

சிப்பின் வெற்றியைப் பொறுத்து, இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும்.

இந்த சிப் செயலிழந்தவர்களுக்கு அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை எளிதாக்கும் என நம்புவதாக எலோன் மஸ்க் ஊடகங்களில் மேலும் விளக்கமளித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content