டோக்கியோ ரயில் நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – சந்தேக நபர் கைது

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள அகிஹபரா நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
டோக்கியோவின் அதிகம் பயன்படுத்தப்படும் வழித்தடங்களில் ஒன்றான யமனோட் லூப் லைனில் உள்ள ரயில், அகிஹபரா நிலையத்தில் “ரயிலில் சிக்கல்” காரணமாக இடைநிறுத்தப்பட்டது என கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் ட்விட்டர் என X இல் தெரிவித்தது.
அகிஹபரா ஸ்டேஷனில் ஒரு பெண் ஒரு ரயிலில் கத்தியைப் வைத்திருந்ததாக ஒரு தகவல் வந்ததாக ஊடகங்கள் கூறியது.
கத்தியை வைத்திருந்ததாக நம்பப்படும் நபர் கைது செய்யப்பட்டு, மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)