இந்தியா

டெல்லி – பேச மறுத்த காதலிக்கு காதலனால் நேர்ந்த விபரீதம்..!

இந்திய தலைநகர் டெல்லியில், பேச மறுத்த காதலியை 13 முறை கத்தியால் குத்திய காதலனை பொதுமக்கள் பொலிஸில் பிடித்துக் கொடுத்தனர்.

டெல்லி லாடோ சாராய் பகுதியை சேர்ந்தவர் பிராக்சி. இவர் கவுரவ் பால் என்ற இளைஞருடன் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளார். இந்த விஷயம் பிராக்சியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளதால், இளைஞருடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என்று கண்டித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, கவுரவ் பாலுடன் பேசாமல் பிராக்சி தவிர்த்துள்ளார். இதனால், பிராக்சி மீது கவுரவ் கடும் கோபத்துடன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனியார் கம்பெனி ஒன்றிற்கு இன்டெர்வியூ செல்வதற்காக பிராக்சி டாக்சியில் ஏறியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த கவுரவ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஒரு கட்டத்திற்கு மேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து 13 இடங்களில் பிராக்சியை சரமாரியாக கவுரவ் குத்தினார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தப்ப முயன்ற கவரவை பிடித்தனர். பின்னர், காயமடைந்த பிராக்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உடனே, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கவுரவை கைது செய்தனர்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிராக்சி அபாயகட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!