இந்தியா

இந்தியாவில் பேருந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் – பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து இடம்பெறும் போது, பேருந்தில் சுமார் 35 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வார்ரிங் கிராமத்தைச் சேர்ந்த ராஜா கூறுகையில், “இந்த கால்வாயில் பாலத்தின் மீது கட்டப்பட்ட சாலையின் நிலை திருப்திகரமாக இல்லை, மேலும் சில நீர்நிலைகளும் இருந்ததால் இந்த துயர விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே