இந்தியா

மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லையென பொலிஸாரிடம் புலம்பிய திருடன்!

கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரே கோயிலில் 3-வது முறையாக திருடி பொலிஸாரிடம் சிக்கிய நபர், இப்போதெல்லாம் மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லை என புலம்பியுள்ளார்.

கோழிக்கோடு பகவதியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து திருடியது தொடர்பாக சஜீவன் என்ற இளைஞரை கைது செய்த பொலிஸார் விசாரணைக்காக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, இப்பகுதி மக்கள் எவரும் சரியில்லை, உண்டியலில் யாரும் காசு போடவில்லை என சஜீவன் புலம்பியதைக் கேட்டு சுற்றி நின்றிருந்த மக்கள் சிரித்துள்ளனர்.

இக்கோயிலில் கடந்த 2 முறை உண்டியலை உடைத்து சஜீவன் திருடியிருந்ததால், தினமும் நடை சாத்தும் போது உண்டியலை திறந்து காணிக்கையை கோயில் நிர்வாகத்தினரே எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி உள்ளனர். இதுதெரியாமல் திருட வந்தவன் ஏமாற்றத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே