இலங்கை

தென் மாகாணத்தில் மின்சாரம் தடைப்படும் அபாயம்!

சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற தோட்டக்கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக எதிர்வரும் பருவகாலம் தவறினால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து 10 நாட்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் 1 மணித்தியாலம் முதல் 03 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடவலவ நீர்த்தேக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டிருந்த 50,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் இந்த நாட்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக அழிவடையும் அபாயத்தில் உள்ளதாக குறிப்பிட்ட அவர்.  அந்த வயல்களுக்கு சமனல ஏரியில் இருந்து தண்ணீர் விடுவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

“மக்களுக்கு உணவளிப்பது பற்றி பேச வேண்டும். அரசாங்கத்திடம் அரிசி இல்லை, நெல் கையிருப்பு இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் அரிசி இருப்பு இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் அதை வைத்திருக்க பணம் இல்லை. ஏனென்றால். நாம் திவாலான நாட்டில் இருக்கிறோம், அதனால் மக்கள் பட்டினியால் சாவார்கள், கொடுக்க முடியாது, அதனால்தான் இந்த சவாலை நாம் அனைவரும் புரிந்துகொள்கிறோம், இப்போது நான் சொல்கிறேன், தண்ணீர் இருக்கும் இடத்தில் எதையாவது வளர்க்க கடினமாக உழைக்க வேண்டும், இல்லை என்றால் சோறு சாப்பிடு, உள்ளதை உண்ண வேண்டும்.”

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்