மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து – 52 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 52 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (29.07) காலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 30 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)