வேலை நிறுத்தத்தை கைவிட்ட ரயில்வே சாரதிகள்!

ரயில்வே சாரதிகள் தனது வேலை நிறுத்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர.
ரயில்வே அதிகாரிகளுடனான மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இயந்திர சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று (23.07) மாலை முதல் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
பல புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான புகையிரத திணைக்களத்தின் முயற்சிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)