வியட்நாமில் பூனை திருட்டு : கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் 400 பூனைகள் மீட்பு
வியட்நாம் முழுவதும் சட்டவிரோதமாக பூனை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனைகளின் போது, அதிகாரிகள் 400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனைகளை மீட்டனர் மற்றும் சுமார் 80 இறந்த பூனைகளைக் கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், வேறொரு இடத்தில் கூடுதலாக 21 பூனைகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது வியட்நாமின் மிகப்பெரிய பூனை திருட்டு வழக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்தக் குற்றக் கும்பல் பல்வேறு மாகாணங்களிலிருந்து பூனைகளைத் திருடி, அவற்றைக் கூண்டுகளில் அடைத்து, ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு கிலோகிராம் பூனையை சுமார் 70,000 வியட்நாமிய டோங்கிற்கு விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




