வெள்ளை மாளிகையின் AI ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன் பதவி விலகுவதாக அறிவித்தார்!
வெள்ளை மாளிகையின் உயர்மட்ட செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகரான ஸ்ரீராம் கிருஷ்ணன் இன்று தனது பதவி விலகளை அறிவித்துள்ளார்.
இந்த மாத்தின் இறுதியில் அவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னோடி தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுப்பதிலும், செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறைக்கான ஒரு தேசிய கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் பங்குகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வரும் முக்கியமான தருணத்தில் அவர் தனது பதவி விலகளை அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் நிலவும் பாதுகாப்பு கவலைகள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் மாதிரிகளை இராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் அவர் இந்த முடிவை எடுக்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது,





