ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழப்பு பதிவாகவில்லை
அண்மைய ஈரானிய தாக்குதல்களின் இஸ்ரேலில் உயிரிழப்பு பதிவாகவில்லை என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (Israel Defense Forces) தெரிவித்துள்ளன.
புதிய தாக்குதல்கள் கண்டறியப்பட்டதால் முன்னதாக மக்கள் பாதுகாப்பு தஞ்சங்களில் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது.
தற்போது தாக்குதல்கள் முடிந்ததால் மக்கள் தஞ்சங்களில் இருந்து வெளியேறலாம் என்று இராணுவம் அறிவித்துள்ளது.
மத்திய இஸ்ரேலில் சில இடங்களில் தேடல் மற்றும் மீட்புப் படைகள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆரம்ப அறிக்கைகளின்படி உயிரிழப்புகள் அல்லது சிக்கியவர்கள் எவரும் இல்லை என்று தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.




