இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த வருவாய் பாரிய அளவில் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் மூலம் நாட்டிற்கு கிடைத்த வருமானம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து 8.07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2024 இல் பெறப்பட்ட 6.575 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 22.8% அதிகமாகும்.

வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மொத்தம் 879.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 310,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்