இலங்கை செய்தி

சர்வதேச மாநாட்டை நடத்துமாறு பரிந்துரை!

இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம். எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளருமான் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இலங்கையானது நாட்டு மக்களுக்கு சொந்தமானது. மாறாக ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு நாட்டை ஆள்வதற்குரிய தற்காலிக அதிகாரமே வழங்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு போதுமானளவு அனுபவம் இல்லை. எனவே, அனுபவம் உள்ளவர்கள் கூறும் ஆலொசனைகளை ஏற்பதற்கு தயாராக வேண்டும்.
இலங்கையை மீட்பவதற்கு சர்வதேச உதவி அவசியம்.

எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துமாறு கோருகின்றோம். இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்கும்.”- என்றார்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!