இலங்கை

ஊடகங்களிடம் நடுவிரலை காட்டிச் சென்ற கெஹலியவின் மகன்! வீடியோவால் சர்ச்சை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை நோக்கி ஆபாசமான சைகையை காட்டும் வீடியோவால் சர்சை ஏற்பட்டுள்ளது.

296 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தியதற்கு கணக்கு காட்டத் தவறிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இன்று அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து , பிரதிவாதியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைகள் நிறைவுபெற்று நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய அவர் ஊடகங்கள் முன்னிலையில் ஆபாசமான சைகையை காட்டிச் சென்றுள்ளார்.

இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!