இந்தியா

இந்தியாவில் 03 கொம்புகளை உடைய டைனோசரின் புதைபடிவம் கண்டுப்பிடிப்பு!

இந்தியாவில் மூன்று கொம்புகளை கொண்ட டைனோசரின் புதைபடிவம் கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள  சஹரன்பூர் மாவட்டத்தின்  நதிக்கரைக்கு அருகில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது, ​​டிரைசெராடாப்ஸ் (Triceratops) எனப்படும் இவ்வகையான டைனோசரின் புதைபடிவம் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதைபடிவம் மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த டைனோசர்கள் 100.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் (Cretaceous) காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த இயற்கை வரலாறு மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர், 35-40 மில்லியன் ஆண்டுகளாக இமயமலை அடிவாரத்தில் புதைந்து கிடக்கும் இந்தப் புதைபடிவம், எளிதில் பாதுகாக்கப்படும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.

இது ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள  அகழ்வாராய்ச்சியின் போது மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான பல புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே