ஜம்மு காஷ்மீர் வெள்ளம் – உயிரிழப்பு 38 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.
இந்த நிலையில் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயமடைந்துள்ளனர் . 220க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளபெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மச்சைல் மாதா யாத்திரை செல்லும் வழி இது நிகழ்ந்திருப்பதால் யாத்ரீகர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.