பொழுதுபோக்கு

திருமணத்திற்கு பின் மீண்டும் விஜய் டிவியில் பிரியங்கா..

விஜய் டிவியில் அனைத்து ஷோக்களிலும் பூந்து விளையாடுபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. யார் என்ன கலாய்த்தாலும் ஜாலியாக எடுத்துக்கொள்வது, வித்தியாசமான சிரிப்பு, ரைமிங், டைமிங் பஞ்ச் என ஒரு மாதிரி நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்லக் கூடியவர்.

அதிலும் சூப்பர் சிங்கர் என்றாலே மாகாபா-பிரியங்கா தான் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. இந்நிகழ்ச்சியில் பாடல்கள் பாடுபவர்களை தாண்டி இவர்கள் அட்ராசிட்டி அதிகமாக இருக்கும்.

கடந்த ஏப்ரல் 16ம் தேதி இவருக்கும் இலங்கையை சேர்ந்த வசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

திருமண பிஸியில் இருந்ததால் சூப்பர் சிங்கர் ஒரு எபிசோடை மகாநதி சீரியல் புகழ் லட்சுமி ப்ரியா தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் சூப்பர் சிங்கர் செட்டிற்கு திரும்பியுள்ளார் பிரியங்கா.

இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பிரியங்கா, இயக்குனரும் நடிகருமான சசிகுமாரிடம் ஒரு கொட்டும் வாங்குகிறார்.

(Visited 32 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!