ட்ரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா, மெக்சிகோ வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரிவிதிப்பை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் ஆகப்பெரும் வர்த்தக பங்காளிகளாக உள்ள மெக்சிகோ, கனடா மீதான இந்த நடவடிக்கை அவ்வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவுக்கு எதிராக வரிவிதிப்பை அறிவித்துள்ளனர்.
144 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகள்மீது 25 சதவீதம் வரிவிதிக்கப்போவதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.இதன்மூலம் கிட்டத்தட்ட 28 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருள்களுக்கான வரிவிதிப்பு பிப்ரவரி 4 (செவ்வாய்க்கிழமை) முதல் நடப்பிற்கு வரும் என்று ட்ரூடோ கூறினார்.
மேலும், கிட்டத்தட்ட 115 பில்லியன்டொலர் மதிப்புள்ள பொருள்களுக்கான வரிவிதிப்பு 21 நாள்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதைத்தான் அதிகம் பாதிக்கும் என்றும் ட்ரூடோ கூறினார். கனடிய மக்கள் கனடாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை அதிகமாக வாங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.மேலும் கனடியர்கள் அமெரிக்காவில் விடுமுறை நாள்களை கழிப்பதைவிட கனடாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பொருளியலை ஊக்கப்படுத்த வேண்டும் என்று ட்ரூடோ தெரிவித்தார்.
இதற்கிடையே, மெக்சிகோவின் பிரதமர் கிளாவ்டியா செயின்பவும் தன் நாட்டின் பொருளியல் அமைச்சருக்கு அமெரிக்க இறக்குமதிகள் மீது வரிவிதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி 4ஆம் திகதி முதல் கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரிவிதிப்பதாக அறிவித்தார்.
கனடாவில் தயாரிக்கப்படும் எரிபொருள் சார்ந்த பொருள்களுக்கு புதிய வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.