இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை அரசியலில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுர

நாடதளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி அசைக்க முடியாத முன்னிலை பெற்றுள்ளது.

வெளியான முடிவுகளுக்கமைய, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை இலகுவாக பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2/3 என்ற பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அநுர குமார திசாநாயக்க, நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தெளிவான பெரும்பான்மை தேவையாக காணப்பட்ட நிலையில் அதனை தற்போது பெற்றுள்ளனர்.

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன