உலகம்

ஜோ பைடன் வெளியிட்ட கருத்து ; கண்டனம் தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பினர்

காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி 6 மாதங்களை கடந்து விட்டது. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் மும்முனை தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி விட்டது.

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் உயிருக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கி உள்ளனர். ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான ரஃபாவில் இறுதி கட்ட தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இங்கு தாக்குதல் நடத்தினால் ஏராளமானவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.

எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரபாவில் தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் இதற்கு அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலுக்கு 19 பேர் பலியாகினர். இதனால் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது.

OPINION - Will condemning Hamas push Israel to end its policy of genocide?

ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இன்னும் 100க்கும் மேற்பட்டவர்கள் பிணைக் கதிகளாக உள்ளனர். இவர்களை மீட்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களை விடுவித்தால் காசாவில் நாளையேபோர் நிறுத்தம் சாத்தியமாகும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்தார்.

See also  இன்றைய தினம் வானில் ஏற்படவுள்ள மாற்றம்

ஜோ பைடனின் இந்த கருத்துக்கு ஹமாஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபரின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் கண்டிக்கிறோம். இது பல சுற்றுகளாக நடந்து வரும் பேச்சு வார்த்தையில் ஒரு பின்னடைவாக இதை நாங்கள் கருதுகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content