ரஷ்யாவில் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

ரஷ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை ரஷ்ய சிறப்புப் படைகள் கொன்றதாக தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
கபார்டினோ-பால்காரியா குடியரசின் தலைநகரான நல்சிக்கின் புறநகர் பகுதியில் சந்தேக நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திட்டமிட்டதாக நம்பப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை ரஷ்ய படையினர் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 22 அன்று மாஸ்கோ கச்சேரி அரங்கில் 145 பேர் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)