செய்தி வட அமெரிக்கா

அமெரிக்கா-டெக்சாஸில் பேருந்து நிறுத்தத்தில் கார் மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வீடற்றோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள பிரவுன்ஸ்வில்லி நகரில் இந்தச் சம்பவம் நடந்தது.

ஆறு பேர் காயமடைந்தனர், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமானது.

ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் வேண்டுமென்றே நடந்ததாகத் தெரிகிறது என்று உள்ளூர் ஊடகங்களுக்கு போலீஸார் தெரிவித்தனர்.

அருகிலுள்ள பிஷப் என்ரிக் சான் பெட்ரோ ஓசானாம் மையத்தின் இயக்குனர் விக்டர் மால்டோனாடோ, பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் வெனிசுலா ஆண்கள் என்று கூறினார்.

பிரவுன்ஸ்வில்லி பொலிஸ் திணைக்களத்தின் லெப்டினன்ட் மார்ட்டின் சண்டோவல் உள்ளூர் ஊடகத்திடம் கூறுகையில், ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், மேலும் போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இறந்தவர்களில் புலம்பெயர்ந்தோர் இருக்கலாம் என்று லெப்டினன்ட் சாண்டோவல் கூறினார்.

அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரவுன்ஸ்வில்லி நகரம் சமீபத்தில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பு கண்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content