இலங்கை

இலங்கை தபால் நிலையங்களில் குவிந்து கிடக்கும் 7 லட்சம் கடிதங்கள்

இலங்கையில் தபால் தொழிற்சங்கங்கள் நேற்றுமுன்தினம் பிற்பகல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று மாலை 04.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

வரலாற்றுப் பெறுமதியான நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலைய கட்டடங்களை தனியாருக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அவர்களின் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 07 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் மட்டும் 04 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்