ஆசியா

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 48 பெண்கள்

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 48 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது தோ பாயோ, புக்கிட் திமா, ரிவர் வேலி மற்றும் சின் மிங் ஆகிய இடங்களில் உள்ள மசாஜ் செய்யும் இடங்களில் இந்த சோதனை நடந்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டு அமலாக்க சோதனை நடவடிக்கை கடந்த மாதம் ஏப்ரல் 26 முதல் 28 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது.

அதில் சிக்கிய 20 முதல் 70 வயதுக்குட்பட்ட மொத்தம் 110 பேர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அதில் பிடிபட்ட 48 பெண்கள், 20-47 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் Women’s Charter 1961 சட்டத்தின்கீழ் விசாரணையில் உள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதில் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டம் 1990 இன் கீழ் work permit அனுமதி இல்லாமல் பணிபுரிந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பிடிபட்டவர்களிடன் இருந்து ரொக்க பணம், கையடக்க தொலைபேசி மற்றும் சூதாட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content