இலங்கை செய்தி

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 3 மாணவர்கள்

தலைமன்னார் ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்கள்.

இந்த நிகழ்வுக்கான அனுசரணையை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியுள்ளது.

குறித்த சாதனை நிகழ்வுகள் நேற்றைய தினம் (21) மாலை 4. மணி அளவில் நீச்சல் குழுவினர் தனுஷ்கோடி கரைக்குச் சென்று இன்று (22) காலை 3. மணியளவில் கடலில் குதித்து நீச்சல் நிகழ்வை ஆரம்பித்து மதியம் 1. மணியளவில் தலைமன்னார் கரையை வந்தடைந்தனர்.

குறித்த சாதனை மாணவர்களை மன்னார் ரோட்டரி கழக உறுப்பினர்கள் உட்பட பல கல்வியாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த சாதனை நிகழ்வில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாரணர்களின் 150 வருட நிறைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், 15 வயதுக்குட்பட்ட ஒரு மாணவரும் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்தார்கள்.

இவர்களுக்கான சான்றிதழ்களை சோழன் ஆசிய சாதனை அமைப்பு வழங்கியிருந்தது.

மேலும் பல அனுசரணையாளர்கள் உடன் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கான இணை அனுசரணை மன்னார் ரோட்டரி கழகம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content