ஆசியா முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் சட்ட விரோதமாக வீசாவுக்கான பத்திரங்களை வழங்கிய 27 பேர் கைது

சிங்கப்பூரில் வேலைசெய்வதற்காக வெளிநாட்டு தொழிலார்களை அழைத்து வர சட்டவிரோதமாக வீசா பெறுவதற்கான பிரகடன பத்திரங்களை பொய்யாக மேற்கொண்டதாக 27 பேர் சிங்கப்பூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்தவர்கள் மீது சட்டவிரோதமாக வேளையில் அமர்த்தியது, பொய்யான உறுதி ஆவணம் வழங்குதல் , நிறுவங்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொழிலார்களுக்குக்கான எண்ணிக்கையில் மோசடி செய்தல் போன்ற குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகளின் பொழுது 19 இடங்களுக்கு அதிகாரிகள் சென்று இருந்தார்கள். இவ்வாறு நடைபெற்ற சோதனைகளின் பொழுது 290 தொழிலார்களை இந்த 9 நிறுவனங்கள் நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அமைச்சு குற்றம் சாட்டி உள்ளது.

Photo: Ministry of Manpower

இதனை தொடர்ந்து 27 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

சிங்கப்பூர் நிறுவங்கள் முறையான அனுமதி இன்றி வெளிநாட்டு தொழிலார்களை பணியில் அமர்த்தினால் $5000-$30000 வரை அபராதமும் ஒருவருட சிறை ஆழ்ந்து இரண்டும் பெறக்கூடும். இவர்கள் எதிர்காலத்தில் வெளிநாட்டு தொழிலார்களை பணியில் அமர்த்துவதில் இருந்து தடை செய்யப்படுவார்கள்.

வெளிநாட்டவர்கள் சட்ட விரோதமாக வேலை செய்தால், $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், மேலும் இரண்டு வருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். தண்டனைகளுக்கு பின்னர் சிங்கப்பூரில் எப்பொழுதும் வேலை செய்வதில் இருந்து தடை விதிக்கப்படும்.

(Visited 7 times, 1 visits today)

hqxd1

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content