விளையாட்டு

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

  • January 11, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lanka மற்றும் பாகிஸ்தான் Pakistan அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி-20 (T-20) போட்டி இன்று நடைபெறுகின்றது. இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு, தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் Dambulla International Stadium போட்டி நடைபெறும். பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த […]

அரசியல் இலங்கை செய்தி

வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு அஞ்சுகிறதா இலங்கை?

  • January 11, 2026
  • 0 Comments

” ஐ.நாவின் சமவாயங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக அங்கத்துவ நாடொன்று செயல்படுமானால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு அஞ்சும் வகையிலேயே இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்புகள் உள்ளன என்பது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள், சமவாயங்கள் மற்றும் கொள்கைகள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே உலக நாடுகள் செயல்பட […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு கை கொடுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!

  • January 11, 2026
  • 0 Comments

கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்காதிருக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. மேற்படி பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறீதரன் S. Sritharan தெரிவித்தார். “தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டையாக விட, அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவளிக்காது என தெரியவருகின்றது. “ […]

ஐரோப்பா

ரஷ்யாவில் பற்றி எரியும் வோல்கோகிராட் எண்ணெய் கிடங்கு!

  • January 11, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு  உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்திய மாதங்களில் உக்ரைன் ரஷ்ய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது வான் பாதுகாப்பு படைகள் 0600 GMT நிலவரப்படி 67 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

உலகம்

சிரியாவில் இஸ்லாமிய குழுக்கள் மீது மற்றுமொரு தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்கா!

  • January 11, 2026
  • 0 Comments

சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) குழுவின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் கூட்டாளிப் படைகளும் பெரிய அளவிலான தாக்குதல்களை நேற்று நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) அறிவித்துள்ளது. சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீது IS குழு நடத்திய கொடிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் கூட்டாளிப் படைகளைப் பாதுகாக்கவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று Centcom தெரிவித்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து அயர்லாந்தில் விவசாயிகள் போராட்டம்

  • January 10, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்(European Union) தென் அமெரிக்க கூட்டமைப்பு மெர்கோசூருக்கும்(Mercosur) இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக அயர்லாந்து(Ireland) விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ஒரு நாளுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. மத்திய நகரமான அத்லோனில்(Athlone), அயர்லாந்து முழுவதிலுமிருந்து விவசாயிகள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய கூடினர். இதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில்(France) விவசாயிகள் போராட்டத்தில் […]

இந்தியா செய்தி

குஜராத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் கைது

  • January 10, 2026
  • 0 Comments

குஜராத்தின்(Gujarat) நவ்சாரி(Navsari) மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ(POCSO) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா(Bharatiya Nyaya Sanhita) ஆகிய பிரிவுகளின் கீழ் எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 7ம் திகதி வான்ஸ்டா(Vansta) நகரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கழிப்பறைக்காக தனது வீட்டை விட்டு வெளியேறிய போது மூன்று மோட்டார் […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் நில உரிமையாளரால் சுட்டு கொல்லப்பட்ட இந்து விவசாயி

  • January 10, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின்(Pakistan) சிந்து மாகாணத்தில் நில உரிமையாளரால் ஒரு இந்து விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், இது நாட்டில் உள்ள சிறுபான்மை குழுக்களின் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. சர்பராஸ் நிஜாமணி(Sarfaraz Nizamani) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், இந்து விவசாயி கைலாஷ் கோல்ஹியின்(Kailash Kolhi) மார்பில் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தை தொடர்ந்து சிந்து(Sindh) மாகாணத்தில் பல இந்து சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் பாகிஸ்தான் கூட்டாட்சி மற்றும் உள்ளூர் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய […]

இந்தியா செய்தி

டெல்லியில் குண்டர்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய 67 வயது பெண் கைது

  • January 10, 2026
  • 0 Comments

டெல்லியில்(Delhi) செயல்படும் குண்டர்கள் மற்றும் பயங்கரமான குற்றவாளிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய குற்றச்சாட்டில் 67 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தைத் தவிர்க்க தனது வயதைப் பயன்படுத்தி, அந்தப் பெண் மத்தியப் பிரதேசத்தில்(Madhya Pradesh) உள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து துப்பாக்கிகளை வாங்கி டெல்லி அல்லது மீரட்டுக்கு(Meerut) கொண்டு செல்வார், அங்கு ஆயுதங்கள் குண்டர்களுக்கு விற்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீரட்டில் வசிக்கும் ராம்பிரி(Rambri) என்ற பெண் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து நான்கு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் […]

உலகம் செய்தி

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • January 10, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (10) பிற்பகல் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுனாமி […]

error: Content is protected !!