உலகம் செய்தி

குவாத்தமாலாவில் (Guatemala) அவசரகால நிலை பிரகடனம்!

  • December 15, 2025
  • 0 Comments

குவாத்தமாலாவில் (Guatemala) உள்ள இரண்டு நகராட்சிகளில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி அந்நாட்டு ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ (Bernardo Arévalo) நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். சோலோலா (Solola) துறையிலுள்ள நஹுவாலா (Nahuala) மற்றும் சாண்டா கேடரினா (Santa Catarina)  இக்ஸ்டாஹுகான்  (Ixtahuacan) ஆகிய நகராட்சிகளில் இந்த அவசரகாலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதமேந்திய நபர்கள்  ஒரு இராணுவச் சாவடியையும் ஒரு காவல் நிலையத்தையும் தாக்கி, சாலைகளைத் துண்டித்து, பேருந்துகளைக் கடத்திச் சென்றதன் விளைவாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் கும்பல்கள் […]

இலங்கை

மீளவும் திறக்கப்படும் பாடசாலைகள் – சீருடைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

டித்வா பேரிடரை தொடர்ந்து நாளைய தினம் மீளவும் பாடசாலைகளை திறக்க கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளை இன்று மேற்கொள்ள அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை தவிற ஏனைய பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களுக்கும், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் பாடசாலை சீருடைகள் தொடர்பாக தளர்வான கொள்கையை செயற்படுத்தவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.  

கருத்து & பகுப்பாய்வு செய்தி

கொவிட் – 19 தடுப்பூசியால் ஏற்படும் மரணங்கள் – ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை!

  • December 15, 2025
  • 0 Comments

COVID-19 தடுப்பூசியால் இளைஞர்கள் மத்தியில் எவ்வித திடீர் மரணமும் ஏற்படவில்லை என்பதை புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானது எனவும் குறித்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ்  நடத்திய ஒரு வருட கால பிரேத பரிசோதனை அடிப்படையிலான ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாம் நிலை பராமரிப்பு மையத்தில் ஒரு வருட கண்காணிப்பு ஆய்வு’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் […]

உலகம் செய்தி

மொரோக்கோவின் எல்லைக்கு அருகே புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு!

  • December 15, 2025
  • 0 Comments

மொரோக்கோவின் (Morocco) அல்ஜீரியா (Algeria) எல்லைக்கு அருகே 09 ஆப்பிரிக்க புலம் பெயர்ந்தோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உறைபனியின் தாக்கத்தால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பநிலைக்கு பெயர் பெற்ற மொராக்கோவின் தொலைதூர மலைப்பாங்கான பகுதியான ராஸ் அஸ்ஃபோரில் (Ras Asfour) 07 ஆண்கள் மற்றும் 02 பெண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இறந்த நபர்கள் பற்றிய கேள்விகளுக்கு மொரோக்கோவின் உள்துறை அமைச்சகம் உடனடியாக […]

இலங்கை

மலையக சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

மலையக சமூகம் எதிர்கொள்ளும் பேரிடர் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர்  மனோ கணேசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், “உங்களுக்குத் தெரியும், மலையக மக்கள், குறிப்பாக கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், சமீபத்திய டித்வா பேரழிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நில உரிமை, வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் குறைவாகவும், சில […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததன் விளைவே இது: ஆஸ்திரேலியாமீது இஸ்ரேல் கடும் விமர்சனம்!

  • December 15, 2025
  • 0 Comments

யூத எதிர்ப்பு தாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார். பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததன்மூலம் ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இதனை செய்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை பலவீனமான தலைமைத்துவம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். யூத எதிர்ப்பு புற்றுநோய் போன்றது. தலைவர்கள் அமைதியாக இருக்கும்பட்சத்தில் அது வேகமாக பரவுகின்றது. புற்றுநோய் பரவ ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இடமளித்தது. அதனால்தான் யூதர்கள்மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய சம்பவம்: 15 பேர் பலி: துப்பாக்கிதாரிகள் அடையாளம்!

  • December 15, 2025
  • 0 Comments

சிட்னியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து 50 வயதான சஜிட் அக்ரம் மற்றும் 24 வயதான நவீட் அக்ரம் ஆகியோரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 50 வயதான நபர் உரிமம் பெற்ற ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சிட்னி போண்டி கடற்கரையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் வைத்தியசாலையில் […]

இலங்கை செய்தி

“கடற்படைக்குப் பாராட்டு” – திருகோணமலையில் ஜனாதிபதி உரை

  • December 14, 2025
  • 0 Comments

மரியாதைக்குரிய, ஒழுக்கமான மற்றும் துணிச்சலான படையான கடற்படையில் இணைந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் (13) சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள், 65 ஆவது ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இடைநிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிச் செல்லும் விடுகை அணிவகுப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த நாட்டில் மிகவும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய திட்டமிடல் சட்ட ஆலோசகர் விலகல்: அரசாங்கத்தில் குழப்பம்.

  • December 14, 2025
  • 0 Comments

பிரிட்டனின் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதித் திட்டங்களுக்காகத் திட்டமிடல் சட்டங்களை மாற்றுவதற்கான நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) முயற்சிக்கு ஆலோசகராக இருந்த சிரேஷ்ட வழக்கறிஞர் கத்ரின் கௌவார்ட் (Catherine Howard), நான்கு மாதங்களுக்குப் பிறகு அரசாங்கத்தை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திட்டமிடல் விதிமுறைகளை ஒதுக்கித் தள்ளி, பெரிய திட்டங்களை உடனடியாகத் தொடங்க அரசாங்கம் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளுக்கு எதிராக அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் இவரின் […]

இலங்கை செய்தி

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கான உபகரணங்கள் கையளிப்பு!

  • December 14, 2025
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட ஒரு தொகை உதவிப் பெருட்கள் ( 13) கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது. அவசர சிகிச்சைக்குரிய (ICU) படுக்கைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் குழந்தை தொட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் இவற்றில் அடங்கும். இது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை, நோயாளிகளின் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகளை மேட்கொள்ள மேலும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நன்கொடை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர் Dr. (திருமதி) ருவினி ரசிகா பெரேராவினால் வைத்தியசாலையின் […]

error: Content is protected !!