இலங்கை

கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! பயணிக்கு நேர்ந்த கதி!

  • November 21, 2025
  • 0 Comments

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குச் சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த ஒரு பயணி திடீரென நோய்வாய்ப்பட்டு தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பயணி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A-380, நேற்று இரவு சுமார் 7.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குப் […]

உலகம்

கம்போடியாவில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து – 13 பேர் பலி!

  • November 21, 2025
  • 0 Comments

கம்போடியாவில் பயணிகள் பேருந்து ஒன்று நேற்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பயணிகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சீம் ரீப்பில் (Siem Reap) இருந்து தலைநகர் புனோம் பென்னுக்கு  (Phnom Penh) பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனையில், அவர்களது உறவினர்கள் எடுத்துச் செல்லும் வரை வைக்கப்படும் […]

இலங்கை

அரகலய போராட்டம் ஜனநாயக வழிமுறைகளில் அடக்கப்பட்டது – ரணில்!

  • November 21, 2025
  • 0 Comments

இலங்கையில் ‘அரகலயா’ எதிர்ப்பு இயக்கம் ஜனநாயக வழிமுறைகள் மூலம் அடக்கப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “நாங்கள் அனைத்தையும் செயல்படுத்தியதால், இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடிந்தது. வங்கதேசத்திலும் ஒரு பிரச்சனை இருந்தது. மக்கள் அங்கு வீதிகளில் இறங்கி போராடினர், இறுதியில் அரசாங்கம் பலப்பிரயோகம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அது நாம் எதிர்கொண்ட சூழ்நிலையைப் போல தீவிரமானது அல்ல. நேபாளத்தைப் பாருங்கள், அங்கு சமூக ஊடகங்களைக் […]

இலங்கை

இன்று ஆரம்பம் மட்டுமே: நாடு முழுவதும் 1000 கூட்டங்கள் நடத்த ஏற்பாடு!

  • November 21, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமரின் ஆரம்பமே இன்று நடைபெறும் நுகேகொடை கூட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டது. அதேபோல நாட்டு மக்கள் பரிதவிக்கும்போது எம்.பிக்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” எனவும் அவர் கூறினார். “ எத்தடை வரினும் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். […]

செய்தி விளையாட்டு

சிம்பாப்வே அணியிடம் மோசமாக தோல்வியடைந்த இலங்கை

  • November 20, 2025
  • 0 Comments

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. சிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) 49 ஓட்டங்களும் […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது

  • November 20, 2025
  • 0 Comments

பன்னல(Pannala) பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் (PNB) கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் போதைப்பொருள் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலை இடைமறித்து அதன் ஆறு மீனவர்களை கைது செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் (PNB) நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் […]

உலகம் செய்தி

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது – வெள்ளை மாளிகை

  • November 20, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின்(South Africa) ஜோகன்னஸ்பர்க்கில்(Johannesburg) நவம்பர் 22-23ம் திகதிகளில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஆரம்பத்தில், அமெரிக்கா இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை மறுப்பு தெரிவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. “தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் அமெரிக்கா அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காது ” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்(Carolyn Leavitt) செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், தென்னாப்பிரிக்கா வெள்ளை […]

உலகம் செய்தி

இந்தியாவிற்கு $93 மில்லியன் மதிப்புள்ள ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

  • November 20, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு(India) $93 மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா(America) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விற்பனை, அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை உறவை வலுப்படுத்த உதவுவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை ஆதரிக்கும் என்று பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை தொகுப்பில் ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான FGM-148 ஜாவெலின் ஏவுகணைகள்(Javelin missiles), இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள்(lightweight missile launchers), பீரங்கிக் குண்டுகள்(artillery shells) […]

இந்தியா செய்தி

ஒடிசாவில் 30க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் மரணம்

  • November 20, 2025
  • 0 Comments

ஒடிசா(Odisha) மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (OSRTC) பேருந்தின் ஓட்டுநர் கோராபுட்-சுனாபேடா(Koraput-Sunabeda) பாதையில் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 44 வயதான ஓட்டுநர் பி. சாய் கிருஷ்ணா, தனது மார்பில் கடுமையான வலி இருந்தபோதிலும் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி அதில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். பேருந்து ஆந்திராவின்(Andhra Pradesh) விஜயநகரத்திலிருந்து(Vijayanagar) ஒடிசாவின் மல்காங்கிரிக்கு(Malkangiri) சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து சாய் கிருஷ்ணா SLN மருத்துவக் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து 1,000 வீரர்களின் உடல்களை பெற்ற உக்ரைன்

  • November 20, 2025
  • 0 Comments

ரஷ்யாவிடமிருந்து(Russia) கொல்லப்பட்ட 1,000 வீரர்களின் உடல்களை பெற்றதாக உக்ரைன்(Ukraine) தெரிவித்துள்ளது. இது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் இடையிலான சமீபத்திய பரிமாற்றமாகும். இந்நிலையில், புலனாய்வாளர்களும் நிபுணர்களும் விரைவில் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு உடல்களை அடையாளம் காண்பார்கள்” என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. 30 ரஷ்ய வீரர்களுக்கு ஈடாக 1,000 கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.