செய்தி வாழ்வியல்

புது அவதாரம் எடுக்கும் குரங்கு அம்மை ( Mpox ): இங்கிலாந்தில் எச்சரிக்கை!

  • December 8, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் ஒரு நபருக்கு  முன்னர் குரங்கு அம்மை  ( Mpox ) என அழைக்கப்பட்ட வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் (UKHSA) தெரிவித்துள்ளனர். இந்த குரங்கு அம்மை ( Mpox ) வைரஸ்  இரண்டு கூறுகளை கொண்டுள்ளன அவை (clade Ib) மற்றும் (clade IIb) என்று அழைக்கப்படுகின்றன சமீபத்தில் ஆசியாவிற்கு பயணம் செய்து திரும்பிய ஒருவரிடம் இந்தத் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி அடைவது சாதாரணமானது என்று பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தத்தை ருவாண்டா மீறியதாக காங்கோ ஜனாதிபதி குற்றச்சாட்டு

  • December 8, 2025
  • 0 Comments

கடந்த வாரம் வாஷிங்டனில்(Washington) கையெழுத்தான அமெரிக்காவால்(America) மத்தியஸ்தம் செய்யப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை ருவாண்டா(Rwanda) மீறியதாக காங்கோ ஜனநாயகக் குடியரசின்(Democratic Republic of Congo) தலைவர் பெலிக்ஸ் ஷிசெகெடி(Felix Tshisekedi) குற்றம் சாட்டியுள்ளார். டிசம்பர் 4 அன்று, கிழக்கு காங்கோவில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட வரலாற்று அமைதி மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தில் பெலிக்ஸ் ஷிசெகெடி மற்றும் ருவாண்டா ஜனாதிபதி பால் ககாமே(Paul Kagame) கையெழுத்திட்டனர். ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) மத்தியஸ்தம் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய குரங்கு அம்மை(mpox) திரிபு

  • December 8, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்(UK) ஒரு புதிய வகை குரங்கு அம்மை(mpox) வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த திரிபு சமீபத்தில் ஆசியாவில் பயணம் செய்து திரும்பிய ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வைரஸ் திரிபு, இரண்டு குரங்கு அம்மை திரிபுகளின் கூறுகளைக் கொண்டுள்ளது, அவை clade Ib மற்றும் clade IIb என அழைக்கப்படுகின்றன. ‘clade Ib’ எனப்படும் ஒரு வகை வைரஸ், சில ஐரோப்பிய நாடுகளில் உள்ளூர் பரவலுக்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டியதால் அந்த அழைப்பு வந்தது. ‘ […]

இலங்கை செய்தி

டித்வா(Ditwa) பேரிடர் – நன்கொடை வழங்கிய பண்டாரநாயக்க அறக்கட்டளை

  • December 8, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவிய சமீபத்திய பேரழிவைத் தொடர்ந்து தேசிய மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை(Bandaranaike Memorial National Trust) 250 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், நன்கொடைகான காசோலை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவிடம்(Harini Amarasooriya) பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. குறித்த காசோலையை அறக்கட்டளையின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Bandaranaike Kumaratunga) மற்றும் இயக்குநர்கள் குழு பிரதமரிடம் ஒப்படைத்தனர்.

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே கையெழுத்தான அதிவேக ரயில் ஒப்பந்தம்

  • December 8, 2025
  • 0 Comments

சவூதி அரேபியாவும்(Saudi Arabia) கத்தாரும்(Qatar) தங்கள் தலைநகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் பாதையை அமைப்பதற்கான முறையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது கடந்த காலங்களில் கடுமையான மோதல்களில் ஈடுபட்டிருந்த இரண்டு வளைகுடா நாடுகளுக்கு இடையேயான முதல் திட்டமாகும். சவுதி ஊடகங்களில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அதிவேக மின்சார பயணிகள் ரயில் ரியாத்தின்(Riyadh) கிங் சல்மான்(King Salman) சர்வதேச விமான நிலையத்தை தோஹாவின்(Doha) ஹமாத்(Hamad) சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும். இந்நிலையில், சவூதி அரேபியாவின் அல்-ஹோஃபுஃப்(Al-Hofuf) மற்றும் தம்மம்(Dammam) நகரங்களும் […]

இந்தியா செய்தி

ஜார்க்கண்டில் குழந்தையின் கண் முன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலி மருத்துவர்

  • December 8, 2025
  • 0 Comments

ஜார்க்கண்டின்(Jharkhand) பலாமு(Palamu) மாவட்டத்தில் 26 வயது பெண் ஒருவர் தனது குழந்தையின் கண் முன் போலி மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தை சளியால் அவதிப்பட்டு வந்ததால் சத்தர்பூர்(Chhatarpur) காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அந்தப் பெண் சென்றுள்ளார். பின்னர், போலி மருத்துவர் அந்த குழந்தைக்கு நீராவி உள்ளிழுக்க(steam inhalation) வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் கூறி, அதற்காக மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து […]

உலகம் செய்தி

துபாயில் உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்

  • December 8, 2025
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(United Arab Emirates) வசிக்கும் இந்திய தொழிலதிபர் தேவேஷ் மிஸ்திரி துபாயில்(Dubai) காலமானதாக கல்ஃப் நியூஸ்(Gulf News) செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கின் டிஜிட்டல் வடிவமைப்புத் துறையில் நன்கு அறியப்பட்ட நபராகவும், பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் தேவேஷ் மிஸ்திரி. ‘சூப்பர்மேன்’ என்று அன்பாக அழைக்கப்படும் மிஸ்திரி, 2011ல் அமோல் கடமுடன்(Amol Kadam) இணைந்து ரெட் ப்ளூ ப்ளர் ஐடியாஸ்(Red Blue Blur Ideas) என்ற டிஜிட்டல் நிறுவனத்தை நிறுவினார். இந்நிலையில், நிறுவனம் […]

இந்தியா செய்தி

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை

  • December 8, 2025
  • 0 Comments

2017ம் ஆண்டு நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பை விடுவிக்க கேரள(Kerala) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மலையாள நட்சத்திரத்தின் தொடர்பை நிரூபிக்க அரசு தரப்பு தவறவிட்டதாக கூறி எர்ணாகுளம்(Ernakulam) முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இந்நிலையில், தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்தில் பேசிய நடிகர் திலீப், “இது எனக்கு எதிரான சதி. எனக்கு உதவிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 2017ல் ஒரு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு தாக்கப்பட்டதைத் […]

ஐரோப்பா

லண்டன் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

  • December 8, 2025
  • 0 Comments

லண்டன் ஹீத்ரோவுக்குச்(London Heathrow) சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானம் (BA1443) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எடின்பர்க் (Edinburgh) விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேற்படி விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் A320 விமானத்தில் இருந்த விமானிகள் 7700 என்ற அவசர சப்தக் குறியீட்டை வெளியிட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு சமிக்ஞை செய்துள்ளனர். இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் எடின்பர்க் விமான நிலையத்தின் செயற்பாடுகளை 40 நிமிடம் நிறுத்திவைத்துவிட்டு குறித்த விமானத்தை […]

ஐரோப்பா

(update) ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை – பல பகுதிகளில் மின் துண்டிப்பு!

  • December 8, 2025
  • 0 Comments

ஜப்பானில்  7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  இன்று பதிவாகியதை தொடர்ந்து பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமோரியின் (Aomori) வடக்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகத்தை முதல் சுனாமி அலை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு அலை ஹொக்கைடோ (Hokkaido) பிராந்தியத்தில் உள்ள உரகாவா நகரத்தை அடைந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு அலைகளும் 40 செ.மீ. உயரத்தை கொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அமோரியில் (Aomori) ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. டோஹோகு […]

error: Content is protected !!