ஐரோப்பா

லண்டனில் வழக்கத்திற்கு மாறான வானிலை – மகிழ்ச்சியில் ஐஸ் கிரீம் வியாபாரிகள்

  • May 8, 2025
  • 0 Comments

லண்டனில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான வானிலை நிழவுவதால் ஐஸ் கிரீம் வியாபாரிகளின் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மக்கள் அதிகம் நாடும் பாரம்பரிய soft-serve வகை ஐஸ் கிரீம் விற்பனை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. லண்டனில் கோடைக்காலம் இன்னும் வரவில்லை. அதற்குள் வெப்பம் தாங்கமுடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சூடான வானிலையால் மக்கள் பெரும்பாலும் வெளியில்தான் பொழுதைப் போக்குகின்றனர். ஐஸ் கிரீம் விற்பனையும் சுறுசுறுப்பாக நடக்கிறது. குறிப்பாக மக்கள் “whippy” வகை ஐஸ் கிரீம்களை அதிகம் கேட்டு வாங்குவதாக வியாபாரிகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇன் 5 புதிய அம்சங்கள்!

  • May 8, 2025
  • 0 Comments

பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், உரையாடல்களை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. உங்கள் சுயவிவரத்திற்கு அங்கீகரிக்கப்படாத அணுகல், தேவையற்ற குழு அழைப்பிதழ்கள் (அ) வாட்ஸ்அப்பில் செய்தி காட்சித்தன்மை குறித்த கவலைகள் இருந்தால், சரியான அமைப்புகளை இயக்குவது போதுமானது. ஒவ்வொரு வாட்ஸ்அப் பயனரும் தங்கள் சாட், அக்கவுண்ட் பாதுகாப்பாக வைத்திருக்க செயல்படுத்த வேண்டிய 5 முக்கிய தனியுரிமை அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். 1. மேம்பட்ட சாட் தனியுரிமை: வாட்ஸ்அப்பில் மேம்பட்ட […]

உலகம்

வெளிநாட்டவர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் தாய்லாந்து!

  • May 8, 2025
  • 0 Comments

வெளிநாட்டவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய, புதிய விதிகளின் கீழ், மே முதலாம் திகதி முதல், அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தாய்லாந்திற்கு வருவதற்கு முன்பு டிஜிட்டல் வருகை அட்டையை ஒன்லைனில் நிரப்ப வேண்டும். தாய்லாந்திற்கு வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த அட்டைக்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டும். தாய்லாந்து டிஜிட்டல் வருகை அட்டை வெளிநாட்டவரின் தனிப்பட்ட தகவல்களையும், அவர்கள் தங்கியிருக்கும் இடம் மற்றும் தங்குமிடம் […]

விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ் ஆட்டம் இடமாற்றம்?

  • May 8, 2025
  • 0 Comments

ஹிமாசல பிரதேச மாநிலம், தா்மசாலாவில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற வேண்டிய பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ் ஆட்டம் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது புதன்கிழமை அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு […]

இலங்கை

இலங்கையில் விரைவில் மின்சார கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • May 8, 2025
  • 0 Comments

இந்த வருடத்திற்கான 2வது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் ஏற்பட வேண்டும் என்றால், அதற்கான யோசனைகள் மே மாதத்தில் ஆணையத்திற்கு கிடைக்க வேண்டும் என ஆணையத்தின் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் குறிப்பிட்டுள்ளார். மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பெற்ற பிறகு, ஆணையம் 3 முதல் 6 […]

இலங்கை

இலங்கையில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை!

  • May 8, 2025
  • 0 Comments

இலங்கையின் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், நாட்டின் ஏனைய சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டம் மற்றும் கடலோரப் […]

இந்தியா

பாகிஸ்தானில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் – மலையில் தஞ்சம்

  • May 8, 2025
  • 0 Comments

பாகிஸ்​தானில் உள்ள 4 இடங்​கள் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்​களில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​திய பாது​காப்​புப் படை நேற்று அதி​காலை​யில் தாக்​குதல் நடத்​தி​யது. அப்​போது வீடு​களை விட்டு வெளி​யேறி பாது​காப்​பான இடங்​களில் தஞ்​சம் அடை​யு​மாறு முஸாப​ரா​பாத் பகு​தி​யில் உள்ள மசூதி ஒலிபெருக்​கி​கள் மூலம் தகவல் தெரிவிக்​கப்​பட்​ட​தாக உள்​ளூர்​வாசிகள் தெரி​வித்​தனர். “வெடி சத்​தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்​தோம். அப்​போது மீண்​டும் குண்டு வெடித்​தது. இதனால் அச்​சமடைந்த நாங்​கள், குழந்​தைகளு​டன் வீட்​டை​விட்​டு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் காளான் கொடுத்து கணவரின் குடும்பத்தை கொலை செய்த பெண்

  • May 8, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நச்சு கலந்த காளானைச் சமைத்து கொடுத்து மாமியாரையும் மாமனாரையும் கொலை செய்துள்ளார். 2023ஆம் ஆண்டில் அந்தச் சமையல் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. எரின் பேட்டர்சன் அவருடைய கணவரின் குடும்பத்தினருக்கு அந்த நச்சுக் காளானைச் சமைத்துக் கொடுத்தார். அதை உண்டு அவருடைய கணவரின் பெற்றோரும் அத்தையும் உயிரிழந்துள்ளார். ஒரு விருந்தாளி மாத்திரம் உயிர் பிழைத்துள்ளார். எரின் சமைக்கும்போது யாரையும் சமையல் அறைக்குள் அனுமதிக்கவில்லை என உயிர்பிழைத்த அந்த விருந்தினர் கூறினார். எந்த உதவியையும் ஏற்றுக்கொள்ளாமல் […]

ஐரோப்பா

ஜெர்மனி வாழ் மக்களுக்கு அபராதம் செலுத்துமாறும் வரும் தகவல் குறித்து எச்சரிக்கை

  • May 8, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் மோசடிக்காரர்கள் போலியான அபராதங்களை அனுப்பி மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக, ஜெர்மனியின் தேசிய போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது, ஜெர்மனியின் தேசிய போக்குவரத்து ஆணையம் சார்பாக வரும் போலியான மின்னஞ்சல்கள் அதிகமாக அனுப்பப்படுகின்றன. குறித்த மின்னஞ்சல்களில் மக்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு அவர்களை அபராதம் செலுத்துமாறும் வலியுறுத்தப்படுகின்றது. எனினும், இவ்வாறான மின்னஞ்சல்களுக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அபராதங்கள் விதிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு அதிகாரப்பூர்வ […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – அரிசி இறக்குமதி பாதிக்கப்படும் அபாயம்

  • May 8, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அரிசி இறக்குமதி பாதிக்கப்படலாம் என்று மலேசியா எச்சரித்துள்ளது. அரிசிக்காக வேறு இடங்களை நாட வேண்டி வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு மலேசியா இறக்குமதி செய்யும் 40 சதவீதம் அரிசி இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் வருவதாக மலேசிய வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சு கூறியது. அந்த இரு நாடுகளின் அரசியல், பொருளாதார நிலைத்தன்மை மலேசியாவின் உணவுப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம் என்று அமைச்சர் முகமது சாபு குறிப்பிட்டுள்ளார். இந்தியா வெள்ளை அரிசியையும் […]

error: Content is protected !!