ஆஸ்திரேலியாவில் தாயாரின் காப்பீட்டு பணத்திற்காக மகன் செய்த அதிர்ச்சி செயல்
மேற்கு ஆஸ்திரேலியாவில் ஆயுள் காப்பீட்டு சலுகைகளைப் பெறும் நோக்கத்திற்காக தனது தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெர்த்தில் வசித்து வந்த ஆண்ட்ரே ரெபெலோ, தனது தாயைக் கொன்று அவரது மில்லியன் டொலர் ஆயுள் காப்பீட்டுப் பணத்தை வசூலிக்க சதி செய்துள்ளார். மேற்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதி, ரெபெலோ தனது ஆடம்பர வாழ்க்கை முறையை பராமரிக்க வைத்திருந்த பணத்தை வீணடித்துவிட்டதாக தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கட்டிய பிக்டன் வீட்டில் தாய் கொலை செய்யப்பட்டார் என்பதும் […]













