அனுராதபுரத்தை சென்றடைந்த இந்தியப் பிரதமர்!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று முற்பகல் அனுராதபுரத்தைச் சென்றடைந்தார். வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். […]













