இலங்கை வித்தியா கொலை வழக்கு : முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடூழியச் சிறைத் தண்டனை
சப்ரகமுவ மாகாண SDIG லலித் ஜயசிங்கவுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிச் செல்ல உதவியமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பதிவாகிய சர்ச்சைக்குரிய சம்பவமான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பான வழக்கில் சுவிஸ் […]













