செய்தி வட அமெரிக்கா

ஓடும் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகர் உயிரிழப்பு

  • December 26, 2024
  • 0 Comments

அலபாமாவில் ஓடும் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பேபி டிரைவர் திரைப்பட நடிகர் ஹட்சன் மீக் உயிரிழந்துள்ளார். 16 வயதான நடிகர், என்பிசி நாடகம் ஃபவுண்ட் உள்ளிட்ட டிவி தொடர்களிலும் தோன்றினார். அலபாமாவின் பர்மிங்காமின் புறநகர் பகுதியான வெஸ்டாவியா ஹில்ஸில் வாகனத்தில் இருந்து மீக் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது காயங்களால் இறந்தார். “இந்த பூமியில் அவரது 16 ஆண்டுகள் மிகவும் குறுகியதாக இருந்தது, […]

ஆசியா செய்தி

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 10 பேர் மரணம்

  • December 26, 2024
  • 0 Comments

காசா மீது இஸ்ரேலிய தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு டசனுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அதிகாரிகளுடன் மருத்துவர்கள் தெரிவித்தனர். காசா நகரின் Zeitoun சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என எச்சரித்தனர். ஒரு தனி சம்பவத்தில், மத்திய காசாவில் உள்ள நுசிராட்டில் உள்ள […]

இந்தியா செய்தி

புனேவில் 2 சகோதரிகளை பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் கைது

  • December 26, 2024
  • 0 Comments

புனேவில் 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக 54 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அஜய் தாஸ், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மற்றும் ராஜ்குருநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு சிறிய உணவகத்தில் சமையல்காரராக பணிபுரிந்துவந்துள்ளார். “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரர் தாஸ். இரண்டு மைனர் சகோதரிகள் காணாமல் போனதாக எங்களுக்கு புகார் வந்தது. பின்னர், அவர்களது வீட்டிற்கு அருகே தண்ணீர் சேமிக்கப் பயன்படுத்தப்படும் டிரம்மில் அவர்களது […]

இலங்கை செய்தி

கையில் வாளுடன் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவை ஆவேசத்துடன் தேடிய நபர்

  • December 26, 2024
  • 0 Comments

கையில் வாளுடன் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவை ஆவேசத்துடன் தேடிய நபர் ஒருவர் இன்று பிலியந்தல ஜாலியகொட பிரதேசத்தில் பொலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். கையில் வாளுடன் உலாவிய இந்த இந்த நபர் இப்பிரதேசத்தில் இருந்த பொது மக்களுக்கு வாக்குவாதப்பட்டு அவர்களை தூசனத்தில் ஏசியத்துடன்?அவர்களை அச்சுறுத்தி உள்ளார். மக்கள் இவரை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கையில் அவர் லொரி ஒன்றின் மீது ஏறி ஜனாதிபதி எங்கே இருக்கிறார் அவரை நான் சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த?வாளினால் எனது கழுத்தை […]

செய்தி தமிழ்நாடு

பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பிரதான சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

  • December 26, 2024
  • 0 Comments

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துவரும் பொறியியல்பீட மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனான மாணவருடன் மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் இருவரும் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதுடன், காதலனை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் மகளிர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். […]

செய்தி விளையாட்டு

விராட் கோலிக்கு அபராதம்!

  • December 26, 2024
  • 0 Comments

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் நான்காவது டெஸ்டில் சாம் கோன்ஸ்டாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அது தவிர முன்னாள் இந்திய அணித் தலைவருக்கு ஒரு குறைமதிப்பு புள்ளியும் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் வழங்கப்பட்டது. இன்று காலை மெல்போர்னில் ஆரம்பமான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, அவுஸ்திரேலியாவின் 19 வயதான இளடம் வீரர் சாம் கோன்ஸ்டாஸின் தோலில் இடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விராட் கோலி […]

இலங்கை செய்தி

உங்களது வாயை மூட முடியுமா?: அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியால் குழப்பம்

  • December 26, 2024
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது, அர்ச்சுனாவை பார்த்து சகாதேவன், ‘பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல், நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள்” என்று கூறினார். அதைக் கேட்டதும் கோபமடைந்த அர்ச்சுனா எம்.பி, “shut up” (வாயை மூடுங்கள்) என்று கூறினார். இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, “ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். Shut up […]

இலங்கை செய்தி

குறைந்த விலை மதுபானம் தயாரிப்புக்கு கடும் எதிர்ப்பு

  • December 26, 2024
  • 0 Comments

குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் கொண்டு வந்த யோசனை தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன், கலால் திணைக்களத்தின் கடமைகள் என்ன? என்பது பற்றியும் புதிய மதுபான தயாரிப்பு யோனைக்கு எதிராகவும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத மதுபானத்தை குறைப்பேன் என்ற போர்வையில் மதுவின் விலையை குறைத்து நாட்டு மக்களின் மது பாவனையை அதிகரித்து […]

இலங்கை செய்தி

பிரிவேல்த் களோபல் 150 கோடி ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டு : இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்

  • December 26, 2024
  • 0 Comments

திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று(26) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் இந்த தம்பதியின் 13 வயது மகனும் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை சென்றனர். இந்த விவகாரத்தில் தங்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்புவதாக, ஊடகவியலாளர்களிடம் பேசிய அப்பெண் தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் தனிப்பிரிவில் அதுகுறித்து முறையிட்டும் சட்டவிரோதமாக இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார், […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

திருக்கோவிலில் கடலில் மூழ்கிய மூவரும் சடலங்களாக மீட்பு

  • December 26, 2024
  • 0 Comments

திருக்கோவில் சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை, சிறுவர்களான மகன் ,மருமகன் உட்பட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால் இழுத்துச் சென்று காணாமல் போயிருந்த நிலையில் சடலம் இன்று வியாழக்கிழமை (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் ஒதுங்கியதையடுத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொத்துவில் சங்கமன்கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் […]