ஆசியா செய்தி

லெபனானில் போர்நிறுத்தம் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

  • November 28, 2024
  • 0 Comments

போர் நிறுத்தம் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, ஈரான் ஆதரவு போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்குச் சொந்தமான தெற்கு லெபனானில் உள்ள ஒரு கட்டிடத்தை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. “சிறிது நேரத்திற்கு முன்பு, தெற்கு லெபனானில் இடைப்பட்ட ராக்கெட்டுகளை சேமித்து வைக்க ஹிஸ்புல்லாவால் பயன்படுத்தப்பட்ட ஒரு வசதியில் பயங்கரவாத நடவடிக்கை அடையாளம் காணப்பட்டது. ஒரு இஸ்ரேலிய விமானப்படை விமானத்தால் அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டது. (இஸ்ரேலிய இராணுவம்) தெற்கு லெபனானில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களை அமல்படுத்த […]

ஐரோப்பா

புடின் மீதான ஐசிசி வாரண்ட்: அழுத்தத்திற்கு உள்ளான பிரான்ஸ்

இஸ்ரேலின் பிரதம மந்திரிக்கு பிறப்பிக்கப்பட்ட சர்வதேச கைது வாரண்ட் மீதான அதன் நிலைப்பாட்டில் அழுத்தத்திற்கு உள்ளான பிரான்ஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை இதேபோன்ற வாரண்டின் கீழ் கைது செய்ய தயாரா என்பதை வியாழனன்று கூற மறுத்துவிட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த வாரம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது முன்னாள் பாதுகாப்புத் தலைவர் மற்றும் ஹமாஸ் இராணுவத் தலைவர் ஆகியோருக்கு காசா மோதலின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது வாரண்ட்களை […]

செய்தி விளையாட்டு

SAvsSL – 42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

  • November 28, 2024
  • 0 Comments

தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் 191 […]

இலங்கை

இலங்கை: பலத்த காற்றினால் குடை சாய்ந்த 250 ஆண்டுகள் பழமையான அரசமரம்!

நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை சாய்ந்தது. இதனால் வைரவர் கோயில் முழுமையாகச் சேதம் அடைந்திருந்ததுடன், மதில் சுவரும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் அவ்வூர் மக்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

ஹாரி பாட்டர் புத்தகத்தின் அரிய முதல் பதிப்பு ஏலத்தில் விற்பனை!

  • November 28, 2024
  • 0 Comments

ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோனின் அரிய முதல் பதிப்பு 36,000 பவுண்டுகளுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தின் எதிர்கால மதிப்பை அறியாமல், கிறிஸ்டின் மெக்கல்லோக் தனது மகன் ஆடமுக்காக 1997 இல் ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-அவான் புத்தகக் கடையிலிருந்து இந்த பிரதியை கொள்வனவு செய்துள்ளார். Staffordshireஇல் இடம்பெற்ற ஏலத்தில் இந்த புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏலதாரர்களின் கூற்றுப்படி, இந்த புத்தகம் 1997 இல் முதன்முதலில் அச்சிடப்பட்ட 500 ஹார்ட்பேக் பிரதிகளில் ஒன்றாகும். இதன் மதிப்பு 30,000 பவுண்டுகள் […]

இலங்கை

இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள் : அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

அம்பாறையில் ஐந்து மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களை உழவு இயந்திரத்தில் வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பாதையின் ஆபத்தான நிலைமைகள் காரணமாக அந்த வீதியை பயன்படுத்த வேண்டாம் என இராணுவம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 11 […]

ஆஸ்திரேலியா

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை: ஆஸ்திரேலியாவில் மசோதா நிறைவேற்றம்

  • November 28, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால் சிறார்கள் மீதான வன்முறைகள், பாலியல் குற்றங்கள் பெருகத் தொடங்கி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறினர். இந்த நிலையில்தான், குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி ஆஸ்திரேலியாவில் உள்ள 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பானீஸ் கூறியிருந்தார். முன்னதாக இதுதொடர்பாக, அவர் எட்டு மாகாணங்களின் தலைவா்களுடன் ஆலோசனை […]

ஆசியா

கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரிய மக்கள் : ஐவர் பலி!

  • November 28, 2024
  • 0 Comments

தென்கொரியாவில் இன்று (28.11) நாளாக பனிப்புயல் மக்களை வாட்டி வதைக்கின்ற நிலையில் பல இரயில் மற்றும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 05 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1907 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து, தலைநகரான சியோலில் மூன்றாவது முறையாக பனிப்பொழிவு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சியோலின் சில பகுதிகளில் 40 செமீ (16 அங்குலம்)க்கும் அதிகமான பனி குவிந்தது, இதனால் 140க்கும் மேற்பட்ட விமானங்கள் […]

வட அமெரிக்கா

டொனால்ட் ட்ரம்ப்புடன் மெட்டா நிறுவன CEO மார்க் ஸூகர்பெர்க் சந்திப்பு

  • November 28, 2024
  • 0 Comments

அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப்பை மெட்டா நிறுவன CEO மார்க் ஸூகர்பெர்க் புதன்கிழமை அன்று புளோரிடாவில் சந்தித்துள்ளார். இருவரும் மார்-எ-லாகோ கிளப்பில் சந்தித்துள்ளனர். இது குறித்து ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சி காலத்தில் வெள்ளை மாளிகையின் துணை தலைமை அதிகாரியாக செயல்பட உள்ள ஸ்டீபன் மில்லர் தெரிவித்தது, “அனைத்து தொழில் நிறுவன தலைவர்களும் ட்ரம்ப்பின் பொருளாதார திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவே மார்க் ஸூகர்பெர்கும் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதில் அவர் உறுதியாக உள்ளார். […]

இந்தியா

தெலுங்கானாவில் வாடகை தாயாக வந்த பெண் மர்மமான முறையில் மரணம்

தெலங்கானா மாநிலத்தில் வாடகை தாயாக சென்ற அஷ்விதா என்ற பெண் 9 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ராயதுர்கம் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ராஜேஷ்பாபு (54) என்பவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்துள்ளார். இதற்காக ஒடிசாவைச் சேர்ந்த அஷ்விதா சிங் (25) என்ற பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணம் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர் […]