இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் வானிலையில் மாற்றம்! எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் எச்சரிக்கை

  • December 10, 2024
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம் மேலும் வலுவடைந்து எதிர்வரும் 11 ஆம் திகதியளவில் இலங்கை – தமிழக கடற்பரப்பை அடையும் என வளிமண்டலவியல் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

மஹிந்தவின் நெருங்கிய உறவினர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை

  • December 10, 2024
  • 0 Comments

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கி உறவினருமான உதயங்க வீரதுங்கவுக்கு அமெரிக்கா தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கும் அமெரிக்காவினால் இந்த தடை விதிக்கப்படடுள்ளது. எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கபில சந்திரசேன இலஞ்சம் பெற்றதாகவும், இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டத்திற்கு உதயங்க வீரதுங்க ஊழல் மோசடியில் ஈடுபட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க […]

விளையாட்டு

தோல்வியடைந்த சில நிமிடங்களில் விராட் கோலி செய்த செயல்

  • December 10, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று 1-1 என தொடரை சமன்செய்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமானால் இந்த தொடரை கட்டாயம் வெல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் இந்திய அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அச்சுறுத்தும் நோய் தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • December 10, 2024
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 858 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 46,385 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை […]

ஆசியா

காங்கோ குடியரசில் மர்ம நோய் – விமான பயணிகளை சோதனையிடும் ஹொங்கொங்

  • December 10, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்காவிலிருந்து ஹொங்காங் வரும் விமானப் பயணிகளுக்கு தீவிர சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மர்ம நோயொன்று காங்கோ குடியரசில் 79 பேரின் உயிரைப் பறித்ததாக செய்தி வெளியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி உலகச் சுகாதார நிறுவனத்திடம் தகவல் கேட்டதாக அந்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்திலிருந்து மர்ம நோய் காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள். […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வாடகை குடியிருப்புகளில் வாழ்பவர்களின் பரிதாப நிலை – அறிமுகமாகும் புதிய வசதி

  • December 10, 2024
  • 0 Comments

  ஜெர்மன் நகரங்களில் வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்கள் தாங்கள் அதிக வாடகையைச் செலுத்துகிறார்களா என்பதை இனிமே கண்டறிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் இடதுசாரி கட்சி அறிமுகப்படுத்திய புதிய ஒன்லைன் கால்குலேட்டரைப் பயன்படுத்தி, இதனை கண்டுபிடிக்க முடியும். பெர்லின், லீப்ஜிக், ப்ரீபர்க் மற்றும் ஹாம்பர்க்கில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் சுரண்டக்கூடிய வகையில் அதிக வாடகை பெறுகின்றார்களா என்பதைக் கண்டறிய Die Linke ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. ஒன்லைனில் தங்களுடைய குத்தகையைப் பற்றிய அடிப்படைத் தகவலை உள்ளிடுவதன் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பாடசாலை உபகரணங்கள் மீதான வரியை நீக்க கோரிக்கை

  • December 10, 2024
  • 0 Comments

இலங்கையில் பாடசாலை உபகரணங்கள் மீதான வரியை நீக்க கோரிக்கை விடுகு்கப்பட்டுள்ளது இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த விடயத்மதை சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் குறிப்பிட்டுள்ளார். நேற்று கொழும்பில் அழைக்கப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

செய்தி விளையாட்டு

பார்டர்-கவாஸ்கர் தொடர் : ஹெட் மற்றும் சிராஜிக்கு அபராதம்

  • December 9, 2024
  • 0 Comments

பார்டர்-கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது களத்தில் நடந்த சம்பவத்திற்காக முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ICC நடத்தை விதி 2.5ஐ மீறிய குற்றத்திற்காக சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இது “மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோஷமான எதிர்வினையைத் தூண்டும் குற்றமாகும். “சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர்கள், […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி கொலை தொடர்பில் ஒருவர் கைது

  • December 9, 2024
  • 0 Comments

நியூயார்க் நகரில் யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சனின் கொலை தொடர்பாக பென்சில்வேனியாவில் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளதாக நியூயார்க் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த நபர் 26 வயதான லூய்கி மங்கியோன் என நியூயார்க் நகர போலீஸ் கமிஷனர் ஜெசிகா டிஷ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். நியூயார்க் நகருக்கு மேற்கே 280 மைல் (450 கிமீ) தொலைவில் உள்ள பென்சில்வேனியாவின் அல்டூனா நகரில் மங்கியோன் கைது செய்யப்பட்டார். அல்டூனாவில் உள்ள ஒரு மெக்டொனால்ட் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

அசாத்தின் வீழ்ச்சி ரஷ்யா மற்றும் ஈரானுக்கு அவமானம் – இங்கிலாந்து வெளியுறவு செயலாளர்

  • December 9, 2024
  • 0 Comments

சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்டமை அசாத்துக்கு மட்டுமல்ல, அவருக்கு ஆதரவாக இருந்த ரஷ்ய மற்றும் ஈரானிய ஆட்சிகளுக்கும் “அவமானம்” என்று இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பேசிய டேவிட் லாம்மி, அசாத் ஒரு “அரக்கன்” மற்றும் “எண்ணற்ற அப்பாவிகளின் இரத்தம் அவரது கைகளில்” இருப்பதாக தெரிவித்தார். “அவர் வெளியேறுவதைப் பார்க்கவும், இது சிரியா மக்களுக்குக் கொண்டு வரும் வாய்ப்பை வரவேற்பதாகவும் நாங்கள் நீண்ட காலமாக நம்புகிறோம்,” என்று […]